செல்வி முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டாள். கணவன் பாபு நொந்து போனான்.
"என்ன புள்ளே. என்கிட்ட கோபமா?"
"ஆமா கோபம்தான். இப்போ புதுசா நவரத்னா பட்டுப் புடவை வந்திருக்காம். பக்கத்து வீட்டுக்காரி நேத்தைக்கு மினுக்கினா. எனக்கு எவ்வளவு வயித்தெரிச்சலா இருந்துச்சு தெரியுமா?"
"செல்வி, ஏற்கெனவே உன்கிட்ட 20 பட்டுப் புடவைக இருக்குதே. போன வாரம்தானே புதுசா ஒண்ணு எடுத்தே"
"அது போன வாரம். இது இந்த வாரம். முடிஞ்சா எடுத்துத் தாங்க. இல்லேன்னா... நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்"
செல்வி பெட்டியைக் கட்டத் தொடங்கினாள். பாபு செய்வதறியாது திகைத்து நின்றான். பாபு ஒரு தனியார் நிறுவனத்தில் கைநிறைய இல்லையென்றாலும் சுமாராக ஊதியம் வாங்குகிறான்.
மனைவிக்கு பட்டுப் புடவைகள் எடுக்கிறேன் பேர்வழி என்று கடனும் வட்டியும் எக்கச்சக்கம் ஏறி விட்டது. இந்த நேரத்தில் புதிதாக தொல்லை வேறு.
"சரி புள்ளே, அழாத. கடன உடன வாங்கியாவது உனக்கு நவரத்னா பட்டு எடுத்துத் தாரேன்"
இந்த புடவையின் விலை 25 ஆயிரம் ரூபாய். கந்து வட்டிக்காரனிடம் போய் நின்றான் பாபு.
"இன்னா நைனா... ஏற்கெனவே வட்டியும் குட்டியுமா இஷ்டத்துக்கு ஏறி கிடக்கு. இதுல புதுசா கடன் வேறயா? போ போ" வட்டிக்காரன் கையை விரித்து விட்டான்.
நாயாக பேயாக பல இடங்களில் அலைந்தும் கடன் கிடைத்த பாடில்லை. புடவை இல்லாமல் எப்படி வீட்டுக்குப் போவது. செல்வி முகத்தில் எப்படி விழிப்பது?
இரவு 12 மணிக்கு பைத்தியம் பிடித்தவனைப் போல், அலைந்து கொண்டிருந்த பாபுவை சந்தேக வழக்கில் ரோந்து வந்த காவலர் கைது செய்தனர். அப்பாவி அவன் மீது, வெடிகுண்டு வைக்க முயற்சி செய்ததாக வழக்கு போடப்பட்டது.
கணவன் வாங்கிய கடனுக்காய், வட்டிக்காரர்கள், செல்வியின் வீட்டையும் பட்டுப் புடவைகளையும் பறித்துக் கொண்டனர்.
இப்போது பாபு சிறையில் களி தின்று கொண்டிருக்க, செல்வியோ, வீட்டில் குடிக்க கூழ் கூட கிடைக்காமல் பட்டினி கிடக்கிறாள்.
முகவரி : ஒளிர்ஞர், 43, ஃபர்ஸ்ட் மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், திருமுல்லைவாயில், இரயில்வே ஸ்டேஷன் அருகில், சென்னை - 600 062..
செல்பேசி: 988 499 2550

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக